இதன் மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக கணக்கு போட்டது. இந்நிலையில், திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்தாலோ அல்லது கூட்டணி வைத்தாலோ, அவரது ஆதரவு ஓட்டுகள் திமுவிற்கு கிடைக்காது என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, திமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஓபிஎஸ் என்றாலே இரட்டை இலை சின்னம் என்ற எண்ணம், முக்குலத்தோர் சமுதாய மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. இதனால் தான், கடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். மேலும், அவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக தென் மாவட்ட மக்கள் பார்க்கின்றனர். எனவே, திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால், வழக்கமாக அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள் கிடைக்காது.