அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தோடு இணைந்து ஒரே காரில் பயணம் செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதனையடுத்து பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ஓபிஎஸ்- டிடிவி தினகரன்- செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக பசும்பொன் வருவது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், தெரியவில்லை, வந்தால் தான் தெரியும், வந்ததும் பதில் சொல்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.