இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''5 ஆண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவுபெற்றதன் காரணமாக முதல்வரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்'' என்றார். முன்னதாக சட்டப்பேரைவையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன், ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்'' என்று கூறியிருந்தார். இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
திமுக அரசு செய்த சாதனைகள்
இதற்கு பதிலளித்த அவர், ''தனது எண்ணம், செயல்பாட்டை, தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் (ஐயப்பன்) சொல்லியிருக்கிறார். இன்று இருக்கிற அரசியல் சூழ்நிலை. 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை, அவர்கள் இந்த நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் இவையெல்லாம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழகத்துக்கே வழி பிறந்துள்ளது'' என்றார். தொடர்ந்து திமுகவில் இணைவீர்களா? என்று கேட்டதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத ஓபிஎஸ், பொறுமை காக்கும்படி கூறினார்.