தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாறி இருக்கிறது. குறிப்பாக திமுக- காங்கிரஸ் இடையிலான உறவு முன்னபோதும் இல்லாத வகையில் ஒரு கடுமையான விரிசலைசந்தித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். அவர் வெளியிட்ட ஒரு கருத்து ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் மிக முக்கியமான தூண் என்றும் அவர்தான் எதிர் கட்சியின் தலைவர்களிலேயே முதன்மையானவர் என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதன் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியல் கணக்கிருப்பதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் சிறந்தது என்று பேசி வந்த மாணிக்கம் தாகூர் இப்போது ஏன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்? அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து அவர் ஏன் பின் வாங்கினார்? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. விவரம் அறிந்தவர்கள் இது குறித்து, ‘‘ஸ்டாலினை பாராட்டுவதன் மூலம் இது தற்காலிக அமைதிக்கான தந்திரம்’’ என்கிறார்கள்.