அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை அடுத்து அக்கட்சியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், ஐயப்பன், மனோஜ் பாண்டியன் உட்பட அனைவரும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.