வட மாவட்டங்களில் வெப்ப அலை
இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தமிழகத்தில் வெப்பநிலையானது இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசிவருகிறது. ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையி 108 டிகிரியை தொட்டுள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை குளு, குளு இடங்களை தேடி செல்கின்றனர். குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் பகுதிக்கு குடும்பத்தோடு படை எடுத்து வருகின்றனர்.