பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை அவ்வப்போது நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 22ம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.