அதாவது தாம்பரம்-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வண்டி எண்: 06017) தாம்பரத்தில் இருந்து நாளை (டிசம்பர் 29 திங்கட்கிழமை) இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (டிசம்பர் 30 செவ்வாய்க்கிழமை) இரவு 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (வ.எண்: 06018) மறுநாள் காலை 9.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
எந்தெந்த இடங்களில் நிற்கும்?
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 16 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். முன்பதில்லாத ரயில் என்பதால் கடைசி நேரத்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம்.