இதுகுறித்து அண்மையில் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விரைந்து ரேஷன் கார்டுகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சுமார் 2,25,000 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக தகுதிவாய்ந்த 46,000 விண்ணப்பதாரர்களின் அட்டைகள் அச்சிடப்பட்டு விநியோகத்திற்குத் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
இன்னும் சில தினங்களில் இந்த புதிய குடும்ப அட்டைகளை விநியோகிக்கும் பணியைத் தமிழக முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, எஞ்சிய தகுதியான விண்ணப்பங்களும் படிப்படியாகப் பரிசீலிக்கப்பட்டு, அனைவருக்கும் ரேஷன் கார்டுகள் தடையின்றி வழங்கப்படும் எனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.