வழக்கு விசாரணையின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், தங்களை நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் வாயிலாக காணொலி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி சுஜாதா, அந்த கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்து சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முதலமைச்சர் மற்றும் அவரது மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு என்பதால், இது பொதுவெளியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!