இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை எடுத்துக்கொண்டது. இந்த கொலை சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்சலாக சாட்சியம் அளிக்க முன்வருவர். காவல்துறையினர் பணி நேரத்திலும்கூட செல்போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்கின்றனர்.