பிஸ்டல் மட்டுமல்ல நீண்ட தூரம் சுடும் துப்பாக்கியும் ரெடியா வச்சிருங்க! போலீசாருக்கு பறந்த உத்தரவு!

Published : Dec 22, 2024, 01:59 PM ISTUpdated : Dec 22, 2024, 02:00 PM IST

நெல்லை நீதிமன்றத்தில் நடந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

PREV
15
பிஸ்டல் மட்டுமல்ல நீண்ட தூரம் சுடும் துப்பாக்கியும் ரெடியா வச்சிருங்க! போலீசாருக்கு பறந்த உத்தரவு!
Nellai Court

கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி நெல்லை நீதிமன்ற வளாகத்தில் 7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டு பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

25
Nellai Court Murder

கொலை வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி நெல்லை நீதிமன்ற வளாகத்தில் 7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டு பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: சென்னையில் சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 20 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் பலி! நடந்தது என்ன?

35
Chennai High Court

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி​மன்ற நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்​வந்து விசாரணை எடுத்துக்கொண்டது. இந்த கொலை சம்பவம் எங்கு நடந்​துள்ளது என்பது தான் கவலை கொள்ள வைக்கிறது. நீதி​மன்ற வளாகத்​துக்​குள்​ளேயே ஒருவரை விரட்டிகொலை செய்ய முடிகிறது என்றால் சாட்சிகள் எப்படி துணிச்​சலாக சாட்​சியம் அளிக்க முன்​வரு​வர்.  காவல்​துறை​யினர் பணி நேரத்​தி​லும்கூட செல்​போனில் தான் அதிகமாக மூழ்கி கிடக்​கின்​றனர். 

45
chennai police

இந்த கொலை சம்பவம் நடந்த​போது பாது​காப்பு பணியில் இருந்து தவறிழைத்த போலீ​சார் மற்றும் அதிகாரிகள் மீது நெல்லை காவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். நிரந்​தரமாக பாது​காப்பு ஏற்பாடுகளை செய்​யும் வரை இடைக்​காலமாக தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து ​மாவட்ட நீ​தி​மன்​றங்​களுக்​கும் தேவையான ஆ​யுதம் தாங்கிய ​போலீ​சாரை பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்த வேண்​டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி  7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

55
DGP Shankar Jiwal

இந்நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், சமீபத்தில் நெல்லை நீதிமன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் எஸ்.ஐ மற்றும் மற்றொரு காவல்துறை அதிகாரி ஆகியோர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே உள்ள பாதுகாப்புடன் கூடுதலாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. காவலர்கள் பிஸ்டல் உடன் நீண்ட தூரம் சுடும் துப்பாக்கிகள் ஆகியவை இரண்டையும் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்பிற்காக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories