இரண்டு மடங்காக உயர்ந்த நிவாரணம்
மின்சாரம் தாக்கி உயிர் பிழைத்தவர்களுக்கு 2 கண்கள் அல்லது கை, கால்கள் இழந்திருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கண் அல்லது ஒரு கை, கால் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா 1 லட்சம் ரூபாயில் இருந்து 1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மின் விபத்துகளால், உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை