நயினாரின் தில்லாலங்கடியை புட்டுப் புட்டு வைத்த நாஞ்சில் சம்பத்.! விஜய்-த்ரிஷா பேச்சுக்கு சவுக்கடி.!

Published : Feb 14, 2026, 12:31 PM IST

nanjil sampath: அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

PREV
15
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு

தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக விஜய் குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். சேலத்தில் நடந்த அதே கட்சியின், மக்கள் சந்திப்புக் கூட்டத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தவெக தலைவர் விஜய், முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாம் நடக்கும். குடும்பங்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேச வேண்டும். அதற்கு முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என கூறியிருந்தார்.

25
வலுக்கும் கண்டனம்

தவெக தலைவர் விஜய் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

35
நாஞ்சில் சம்பத்

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.

45
ஊருக்கு உபதேசம் செய்வதா?

அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?

55
பொறாமைத் தீயில் நயினார்

முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories