தமிழக அரசியலில் நேர்மையும், எளிமையும் கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு சில நாட்களுக்கு காலமானார். நடிகரும், தவெக தலைவருமான விஜய், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில், நல்லகண்ணு இறந்தபோது விஜய் மது குடித்து விட்டு வந்ததாக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நக்கீரன் கோபால், ''நல்லகண்ணு இறப்புக்கு வந்த விஜய் நின்ற இடத்தில் ஒரு கிமீ சுற்றளவுக்கு வாடை அடிக்கிறது. நல்ல மப்பில் வந்துள்ளார். பெரியவர் இறந்து கிடக்கிறார். எவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? அவர் மூச்சுக்காற்று பட்டால் கூட விளங்கி விடுவோம். இப்படி செய்யலாமா?
நாத்தம் தாங்க முடியவில்லை என்று அங்கு இருந்தவர்கள் மூக்கை பொத்தி விட்டனர். நல்லகண்ணு இறப்புக்கு வந்த விஜய் அங்கு இருந்த முத்தரசன் கையை பிடித்து கூட துக்கம் கேட்கவில்லை.
விஜய்யை விட மாட்டோம்
ரஜினிகாந்த் வந்து சில நிமிடங்கள் உட்காட்ந்து விட்டு சென்றார். அவரை விட நீ (விஜய்) பெரிய ஆளா? முத்தரசன், வைகோ போன்ற பெரிய அரசியல் தலைவர்கள் சோறு, தண்ணி சாப்பிடாமல் அங்கு இருந்தனர். அவர்களை விட விஜய் பெரியவரா? ஏதோ கடமைக்கு வந்ததை போல் விஜய் வந்தார். இப்படிபட்டவர்கள் எல்லார் மீதும் பழி போடுகிறார்கள். விஜய்யை விட மாட்டோம். அடுத்துக் கொண்டே இருப்போம்'' என்றார்.
விஜய் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படுமா?
தொடர்ந்து விஜய்யிடம் சங்கீதா விவாகரத்து கேட்ட விவகாரம் தொடர்பாக பேசிய நக்கீரன் கோபால், ''சங்கீதா விஜய்யை ஒரு பாடு படுத்தி விடுவார். சங்கீதாவின் முடிவுக்கு பின்னால் திமுக சதி உள்ளது. மக்களிடம் இது எடுபடாது. விஜய் மீது மக்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று தவெகவினர் கூறுகிறார்கள். லண்டனில் இருந்த சங்கீதாவை கூப்பிட்டு வந்து உன் புருஷனை விட்டு விடாதே என திமுக சொல்லியதா.
திமுக மீது அவதூறு
திமுகவுக்கு இதுவா வேலை. நீங்கள் பரப்பும் பொய்களை நம்புவதற்கு மக்கள் என்ன கேனையர்களா? கட்டிய மனைவியை கதற விட்டவன் எப்படி நல்ல தலைவராக முடியும். திமுக ஒன்றும் சொல்லாது என அக்கட்சி மீது அவதூறு பரப்புகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.