பிரகாஷ் ராஜ் மீது புகார்
இருந்த போதும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்களது புகாரை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடார் சங்க தலைவர் முத்துரமேசு, நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய மக்கள், விஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருப்பதாகவும், இவர் வெளியிட்ட புகைப்படம் நிலாவில் இஸ்ரோ தலைவர் டி ஆத்துவது போல இருப்பதாகவும், இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று தெரிவித்தார்.