வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துறாங்க.. பாமக எம்எல்ஏ குடும்பத்தினர் மீது மருமகள் பரபரப்பு புகார்.!

Published : Aug 22, 2023, 02:29 PM ISTUpdated : Aug 22, 2023, 02:31 PM IST

சேலம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம் வரதட்ணை கேட்டு கொடுமை படுத்துவதாக மருமகள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
13
வரதட்சணை கேட்டு என்னை கொடுமை படுத்துறாங்க.. பாமக எம்எல்ஏ குடும்பத்தினர் மீது மருமகள் பரபரப்பு புகார்.!
salem

சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோலியா(24). இவருக்கும் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவத்தின் மகன் சங்கருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

23
salem

இந்நிலையில், மனோலியா சூரமங்கலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார், நாத்தனார் ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில்  மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், அவரது மகன்  சங்கர் உள்ளிட்ட  4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

33

இந்நிலையில், இந்த புகாரை அடுத்து பாமக எம்எல்ஏ குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. பாமக எம்எல்ஏவின் குடும்பத்தினர் மீது மருமகள் வரதட்சணை கேட்டு புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories