கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறிதும் வருந்தாத தவெக தலைவர் விஜய் ஹஸ்கி குரலில் பேசி அனுதாபம் தேட முயற்சிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
41 பேர் உயிரிழந்ததற்கு மது அருந்தியவர்களும் காரணம்
முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திதினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு மது அருந்தியவர்களும் காரணம். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, அடுத்தவர்கள் மீது பழி போடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதற்காக விஜய் முயற்சிக்கிறார்.
24
விஜய் மீது வழக்குப்பதிய அஞ்சும் போலீஸ்..?
விஜய் எவ்வளவு ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார், அல்லது ஆபத்தானவர்களிடம் சிக்கி இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது. கரூர் உயிரிழப்பில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை ஏன் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை? தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அச்சப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
34
விஜய்யின் சாயம் வெளுத்துவிட்டது
தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலையில், அவரை பாதுகாக்க பாஜக முன்வருகிறது. இதிலிருந்து விஜயின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. விஜயிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் தமிழ்நாட்டை காப்பாற்றுவார்கள். தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய்க்கு, பாஜகவினர் சொல்லிக் கொடுக்கிறார்கள். விஜய் சுயமாக சிந்தித்தால், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். விஜய் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்தது எதற்காக? பாஜக மதவாத கட்சி என்று அவர் என்றைக்காவது சொல்லி இருக்கிறாரா?
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை. ஹஸ்கி வாய்சில் பேசி அனுதாபம் தேட நினைக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் எப்போதும் இணைய மாட்டார். அவரது நோக்கம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளையும், சிறுபான்மையினருடைய வாக்குகளையும் பிரிக்க வேண்டும் என்பது தான். பாஜக, ஆர் எஸ் எஸ் தூண்டுதலின் பெயரில் விஜய் செயல்படுகிறார். இதே போன் தான் டெல்லியில் அன்னா ஹசாரேவை வைத்து காங்கிரஸ் ஆட்சியை பாஜக அப்புறப்படுத்தியது. அதன் பின்னர் தற்போது டெல்லியில் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. இதே பார்முலாவை தான் இங்கும் செய்யப் பார்க்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி உள்ளார்.