இந்த வழக்கில் ஓய்.பாலாஜி தரப்பில் முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்குகளின் விசாரணை நீர்த்துபோகச் செய்யும் வகையில் 2000 பேரை புதிதாக சேர்த்து தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு தந்திரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.