மத்திய அரசு நிதியா,? மாநில அரசு நிதியா.?
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ வ வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்திலிருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும், அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் எ வ வேலு பதில் அளித்துள்ளார்.
இதே போல மின்தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வழிசெய்யும் வகையில், 399 துணை மின் நிலையங்கள் அமைக்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.