அதிரடியாக உயர்ந்த பால் விலை
இருப்பினும் அந்நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் மட்டுமே உயர்த்தின. ஏற்கனவே கடந்தாண்டு (2024) டிசம்பர் மாதம் முதல் வாரத்திலும், நடப்பாண்டின் (2025) பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்திய அனைத்து தனியார் பால் நிறுவனங்களும்
அடுத்த ஒரு மாத இடைவெளியில் (மார்ச் மாதம் 14ம் தேதி முதல்) மீண்டும் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி சில்லறை வணிகர்கள், தேனீர் கடை, உணவகங்கள், இனிப்பகங்களின் உரிமையாளர்கள், கேன்டீன் நடத்துவோர் என பலதரப்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.