காவிரி ஆறு- மேட்டூர் அணை
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதி காவிரி ஆறாகும், காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் என்ற பகுதியில் உருவாகிறது. குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு என பல மாவட்டங்களை கடந்து தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வழியாக சேலம் மேட்டூர் அணையை வந்தடைகிறது.
அங்கிருந்து திறக்கப்படும் நீர் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை செழிப்படைய செய்து கடைசியாக வங்கக் கடலில் கலக்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். விவசாயிகளின் வாழ்வும் உயரும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய நீரை தராமல் கர்நாடகா அரசு பிடிவாதம் பிடிக்கும்.