அமலாக்கத்துறை திடீர் சோதனை
வைத்தியலங்கத்தின் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்திற்கு லஞ்சமாக கை மாறியதாகவும், ஆனால் அந்த பணம் கடனாக பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை திடீர் சோதனையை தொடங்கியுள்ளனர்.
சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறைகள் மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள வீடு மற்றும் அவருக்கு சொந்த மான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஜி அமைச்சர் வைத்தியலிங்கம் தற்போது பாஜகவிற்கு ஆதரவாக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தோடு நெருக்கமாக உள்ள நிலையில் தற்போது நடைபெறும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.