இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தமிழகத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்ற வகையில் இடதுசாரிகள் கட்சிகள், விசிக கட்சிகள் ஆதரவு கொடுத்து இருக்கிறோம். அதன்படி தவெக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்கும் நிலைக்கு தவெக சென்றால், அது மக்கள் தீர்ப்புக்கு எதிரானதாகவே இருக்கும். அப்படி நடக்குமானால், தவெக அரசுக்கான ஆதரவு என்ற எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம் என அதிர்ச்சி அளித்துள்ளார்.