நடிகர் மன்சூர் அலிகான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்ட முன்னனி நடிகர்களும் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். லியோ படத்தில் திரிஷாவுடன் எந்த வித கற்பழிப்பு காட்சியும் இல்லையென கூறியிருந்தார். மேலும் பல நடிகைகள் பற்றியும் பேசியிருந்தார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து மன்சூர் அலிகான் பேச்சிற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். இதே போல நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தனர்.