தமிழ்நாட்டை பின்பற்றி கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார், புதுச்சேரி, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் வெவ்வேறு பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். மேலும் புதிதாக ரேஷன் கார்டு வாங்கிய பெண்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க காத்திருக்கின்றனர்.