சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வான ஜே.சி.டி. பிரபாகர், மூன்று தலைமுறை தலைவர்களின் ஆட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தற்போது விஜய் என மூன்று முதல்வர்களின் ஆட்சிக்காலத்திலும் இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது அனுபவம், சபை நடவடிக்கைகளை சுமுகமாகக் கொண்டு செல்ல உதவும் என தவெக நம்புகிறது. 1980-ல், தனது 28 வயதில், வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், 2026 ஜனவரியில்தான் விஜய்யின் தவெக-வில் இணைந்தார். இந்த சட்டமன்றத் தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக-வின் எழிலன் நாகநாதனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். 73 வயதான பிரபாகர், கட்சியின் ஒரு முக்கிய முகமாகக் கருதப்படுகிறார். துறையூர் தொகுதி எம்.எல்.ஏ-வான எம். ரவிசங்கர், துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.