வரும் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

First Published Aug 23, 2023, 9:39 AM IST

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை என அம்மாட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

ஓணம் இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் அறிவித்துள்ளார். 

 உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறையை ஈடும் செய்யும் வகையில் செப்டம்பர் 9ம் தேதியான சனிக்கிழமை வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!