நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி இன்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கோவை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இளம் பெண்ணும், அவரது நண்பரும் ஒரு காரணம். இந்த வழக்கில் நான் காவல் துறையை குறைசொல்ல மாட்டேன். எனக்கு டீனேஜ் வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதனால் தான் நான் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கின்றேன்.