ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
இது குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"கரூர் த.வெ.க. கூட்ட நெரிசல் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள தகவல்கள், நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாகும்.
இந்த மனுக்களில் ஒன்று, உண்மையில் இறந்தவரின் சட்டப்பூர்வமான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்றொரு மனுவில், சம்பந்தப்பட்ட நபர் ஆவணங்களில் என்ன இருக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலையில், கையொப்பமிடத் தூண்டப்பட்டிருக்கிறார்.