இதனையடுத்து 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 10 பேர் சேர்ந்து இந்த கொலை சம்பத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இவர்களில் காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த ராமன் (எ) பரத் (19), சிவா (19), திருக்காலிமேடு திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் (25), சுல்தான் (32), மோகனசுந்தரம் (18), சின்னகாஞ்சிபுரம் சரண்குமார்(20), ராணிப்பேட்டை, நெமிலி மணிமாறன்(19) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தப்பிக்க முயற்சித்த போது பலருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.