Kamal Haasan First Speech on Parliament: நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஓட்டையும், நாட்டையும் விற்கவே மாட்டேன் என்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் தனது உரையை நிகழ்த்தினார். இது அவரது முதல் உரை என்பதால் மிகவும் கவனம் ஈர்த்தது. ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கிய அவர், “மாநிலங்களவையில் நான் பேசுவதை கௌரவமாகக் கருதுகிறேன்.
24
பெரியாரின் பேரனாக, அண்ணாவின் மகனாக..
காந்தி, பெரியாரின் பேரனாகவும், அண்ணாவின் மகனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். என் சகோதரரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாகக் கற்றுக் கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.
34
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்..
நான் எனது மனதில் மையம் கொண்ட புயலில் இருந்து வரும் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறேன். இந்த வார்த்தைகள் உங்களில் சிலருக்கு காயத்தை உருவாக்கலாம். நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை. எனது பகுதிதறிவு மூளை, கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது.
நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாக கற்பூர புத்தி தான். அது காற்றோடு கலந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின்னர் உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக் குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்க உதவாதா? அதுவும் ஓரளவு உண்மை தான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்.
ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாகப் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர்கள். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.