திமுக அரசின் தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து அடுத்த 10 வருடங்கள் ஆட்சி பிடிக்க முடியாதபடி அதிமுக அரசு தனது முத்திரையை பதித்திருந்தது. இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு வாழ்வா.? சாவா.? என்ற நிலை ஏற்பட்டது. அப்போது திமுகவின் புதிய தேர்தல் அறிவிப்பு தான் மகளிர் உரிமை தொகை,
இது போன்று பேருந்தில் இலவச பயண திட்டமான விடியல் திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மக்களை தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற நிலையில் தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியையும் பிடித்தது. இதில் மகளிர் உரிமை தொகை அறிவிப்பு தான் சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டது.