ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் என்ன.?
அவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொல்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த திருவேங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்த நிலையில், சிறையில் இருக்கும் மற்ற நபர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் திரை மறைவில் பல முக்கிய தலைகளும் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதிமுக,திமுக, காங்கிரஸ்,பாஜக, தமாக என பல கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் தனக்கும் இடையே மோதல் இருந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.