சமூக நீதியெனப் பேசாத ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு, விளிம்பு நிலை மக்களின் மேம்பாடு என நாளும் மேடைகளில் வாய்ப்பந்தல் போடும் திமுக அரசு, சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுவதற்கு ஏன் தயங்குகிறது? இதுதான் உங்களது சாதி ஒழிப்பு நடவடிக்கையா? அடையாள அரசியல் செய்து, அடித்தட்டு உழைக்கும் மக்களை ஏமாற்ற வெட்கமாக இல்லையா? எத்தனைக்காலத்துக்கு ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்? பெரியார் எனும் பிம்பத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, நீங்கள் போடும் சாதிய ஒழிப்பு நாடகமும், உங்களது முற்போக்கு முகமூடியும் கிழிந்து தொங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.