கடந்த சில மாதங்களாகப் பக்தர்களிடம் ரூ.100 பெற்றுக் கொண்டு, கட்டண ரசீதை வழங்காமலும், நாளின் இறுதியில் கோயில் கணக்கில் பணத்தை செலுத்தும் போது, கணினி மென்பொருளில் புகார் கூறிவிட்டு, தலா ரூ.100 என பதிவான பல ரசீதுகளை ரத்து செய்துள்ளார். இதன் மூலம் ரூ.25 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. முதற்கட்டமாக பெண் ஊழியர் மேனகாவை சஸ்பெண்ட் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்த மோசடி சம்பவம் பக்தர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.