Mathipumigu Magalir Thittam: பெண்கள் வங்கிக் கணக்கில் வரப்போகும் ரூ.2,500.. மகளிர் உரிமைத் தொகை! சூப்பர் அப்டேட்!

Published : May 22, 2026, 12:02 PM IST

Mathipumigu Magalir Thittam: தவெக அரசு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாற்றப்பட உள்ளது. 

PREV
14
மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் 1,000 உரிமைத்தொகை வழங்கி வந்தது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தெரிவித்து இருந்தது.

இதேபோல் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

24
தவெக ஆட்சியில் பெண்களுக்கு ரூ.2,500

இதன்பிறகு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக வரலாறு படைத்து திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய், முந்தையை ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். இதற்கிடையே தவெக அரசு அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை ரூ.2,5000 எப்போது வழங்கப்படும் என பொதுமக்கள் காத்திருந்த நிலையில், வழக்கமாக கொடுக்கப்படும் ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் ரூ.2,500 கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

34
மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்பு

மே மாதத்துக்கான ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையை விடுவித்த தவெக அரசு, இந்த திட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. கடந்த திமுக ஆட்சியில் தகுதியில்லாத சில பெண்களும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர் என்று கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக பல வீடுகள் கட்டி அதிக சொத்துகளும் வைத்திருந்த சில குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர். சிலர் பணக்காரர்களாக இருந்தாலும் திமுக கட்சி செல்வாக்கை வைத்து மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தனர்.

அதே வேளையில் தகுதிவாய்ந்த பெண்கள் பலர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன. இதனை தீவிரமாக ஆராயும் தவெக அரசு, தகுதியில்லாத பெண்களை விடுவித்து, தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

44
மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்

அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து தகுதியான பெண்களுக்கும் தவெக அரசு உரிமைத் தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான பட்டியலை முழுமையாக தயாரிக்க வேண்டும். புதிய பயனாளர்களைச் சேர்க்கத் தனி மென்பொருள் மற்றும் செயலிகளை வடிவமைக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது என்பது அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கும். அதற்கேற்ப நிதியை ஒதுக்க திட்டமிட வேண்டும்.

மதிப்புமிகு மகளிர் திட்டம் என பெயர் மாறுகிறது

இந்த மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் அதாவது இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்று பெயர் மாற்றப்பட உள்ளது. ஆகவே இனிமேல் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என்ற பெயரில் தான் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories