மழையால் நிரம்பிய கர்நாடகா அணைகள்
எனவே மேட்டூர் அணை இந்தாண்டாவது நிறையுமா.? விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதே நேரத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கூட தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் தான் கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக கிடு, கிடுவே மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தது. கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகளில் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வெறு வழியின்றி கர்நாடகா அரசால் தண்ணீர் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.