காவிரியும் மேட்டூர் அணையும்
தமிழகத்தில் டெல்டா மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மேட்டூர் அணையாகும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவிலிருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.
அங்கிருந்து விவசாய மக்களின் பயன்களுக்காகவும், குடிநீர் தேவைக்காவும் திறந்து விடப்படுகிறது. இந்த மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது தஞ்சை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் பயன் அடைகின்றனர்.