அலையின் சீற்றம் அதிகரிக்கும்
இது தொடர்பாக இந்திய கடல்சார் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் 2.6 மீட்டர் உயரத்திற்கும், ராமநாதபுரத்தில் 3 மீட்டர் உயரத்திற்கும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கும் அலை எழும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாளை இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலையின் இடைவெளியும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 13 முதல் 15 நொடிகளுக்கு இடையே ஒரு அலை எழும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.