மாற்று பயிருக்கு மாறிய விவசாயிகள்
அதே நேரத்தில் தக்காளி விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் பொதுமக்களுக்கு சரியான முறையில் நியாய விலைக் கடைகளில் தக்காளி கிடைக்காத காரணத்தால் அருகில் உள்ள மார்க்கெட் மற்றும் கடைகளிலோ வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது தக்காளி விலையானது உச்சத்தில் இருந்ததால் வீட்டில் சமையலில் தக்காளி இல்லாமல் சமையல் செய்த கற்றுக்கொண்டனர். இதே போல ஓட்டல்களிலும் தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி சட்னி தயாரிப்பதையும் நிறுத்தினர்.