முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்வது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆடி கிருத்திகையை முன்னிட்டு வரும் 9ம் தேதி புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.