வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை மீண்டும் குறைந்தது..! ஒரு கிலோ தக்காளி விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

Published : Aug 03, 2023, 09:58 AM IST

தக்காளி வரத்து அதிகரத்துள்ளதால் உச்சத்தில் இருந்த தக்காளி விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் 10 ரூபாய் குறைந்து 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2ம் தர தக்காளி கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV
13
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை மீண்டும் குறைந்தது..! ஒரு கிலோ தக்காளி விலை இன்று எவ்வளவு தெரியுமா.?

உச்சத்தை தொட்ட தக்காளி விலை

தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், தக்காளி தொடர்பான உணவுகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி தொக்கு போன்றவை தயாரிப்பதை வீடுகளிலும், ஓட்டல்களிலும் நிறுத்தப்பட்டது.  கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய காலம் போய் எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

குறிப்பாக தக்காளி விவசாயம் செய்த விவசாயிகளுக்கு கடந்த காலங்களில் சரியான அளவில் வருமானம் கிடைக்காத நிலையில் தக்காளியை கீழே கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் ஆந்திரா, கர்நாடக மாநில விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை விட்டு விட்டு மாற்று பயிருக்கு மாறியதால் தக்காளி உற்பத்தி குறைந்ததாக தெரிவிக்கின்றனர்.

23

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தினந்தோறும் தக்காளி வரத்தை பொறுத்து தக்காளி விலை அதிகரித்தும், குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1000 முதல் 1100 டன் தக்காளி வந்ததநிலையில் தற்போது 300 முதல் 400 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதன் காரணமாகவே கிலோவிற்கு 10 ருபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 50 ரூபாயை கடந்து 100 ரூபாயை தொட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு 200 ரூபாயை கடந்தது. இதனால் தக்காளியை வாங்க பொதமக்கள் சிரம்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில் கடந்த ஒரு சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்ததால் மீண்டும் தக்காளி விலை குறைய தொடங்கியுள்ளது.
 

33

இன்றைய தக்காளி விலை என்ன.?

கோயம்பேடு மார்க்கெட்டில்  10 ரூபாய் குறைந்து 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2ம் தர தக்காளி கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று 400 டன் தக்காளி வந்ததால் தக்காளி விலை குறைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தீவிர நாய் பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள்
 

click me!

Recommended Stories