தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இனி இந்த ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படாது!

Published : Apr 05, 2026, 08:33 AM IST

Southern Railway: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட சீரமைப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

PREV
16

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், எந்த வித அசதியும் இல்லாமல் தூக்கிக்கொண்டடே செல்லலாமல் என்பதால் பேருந்து சேவவையை விட அதிகளவில் ரயில் சேவையை பயணிகள் விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

26

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும், பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். இதுகுறித்து முன்கூட்டியே ரயில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும். இந்நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

36

அதாவது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் நடைபெற்று வரும் 4-ம் கட்ட சீரமைப்புப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ரயில் சேவைகளின் இயக்க முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடைமேடைகளில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் 21ம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

46

சென்னை எழும்பூர் - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ்' ரயில், 2026 ஏப்ரல் 07 முதல் ஏப்ரல் 22 வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். தாம்பரத்திலிருந்து புறப்படும். மேலும் இந்த ரயிலானது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08:05 மணிக்கு புறப்படும்.

56

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 7ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து இரவு 09:05 மணிக்கு புறப்படும்.

66

நெல்லை- சென்னை எழும்பூர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் வரும் 21ம் தேதி வரை காலை 6.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்து அங்கு நிறுத்தப்படும். தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லும் இந்த ரயிலானது நாளை முதல் மறு அறிவிப்பு வரும் இந்த ரயில் சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். பீச் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 06:20 மணிக்கு இந்த ரயில் புறப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories