திமுக வென்றால் நீட் தேர்வை ரத்து செய்வோம்... ரகசியத்தை வெளியிட்ட கனிமொழி..!

Published : Jan 27, 2026, 02:59 PM IST

நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சமயமாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான்.

PREV
12

‘‘எப்போதும் திமுக தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்று அழைப்பார்கள். இந்தமுறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்" என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். நிச்சயமாக திமுகவின் தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிச்சமயமாக நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லாமல் அடுத்து ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப் போவதும் நாங்கள் தான். எப்போதுமே திமுகவின் தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என்ற அழைப்பார்கள். இந்த தேர்தலில் தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கலாம்.

22

சட்டமன்ற தேர்தல் வருகிறது. நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து வழக்கும் போட்டுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்த செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக ஒன்றிய ஆட்சியில் ஆட்சி மாற்றம் வரும் போது, நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் இருக்கும்போது நிச்சயமாக எங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். அதுவரை நாங்கள் நீதிமன்றத்தைத்தான் நட வேண்டி உள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் சில கடைகள் மூடப்படும். கிட்டத்தட்ட 500 கடைகளை மூடி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. அவர்களைப் போற்றத்தக்க கூடிய வகையில் இந்த ஆட்சி இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories