இந்நிலையில் கடந்த 3-ம் தேதி செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கோபிநாத் (30), சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்க வந்தார். இந்த தகவலை சரண்யா கள்ளக்காதலன் முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வழியாக வந்த சதீஷ்குமாரிடம் முருகன் உள்ளிட்ட 4 பேரும் வழிமறித்து அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சரண்யா, கள்ளக்காதலன் முருகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.