கும்மிடிப்பூண்டி ஆ,ம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது வட மாநில நபரால் கடத்தப்பட்டு, மாந்தோப்பில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் சோழவரம் அருகே தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கொடூர குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குற்றவாளியின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த குற்றவாளியை கைது செய்ய போலீசார் பல இடங்களில் புகைப்படங்களையும் ஒட்டினர். குற்றவாளி தொடர்பாக தகவல் தெரிவித்தால் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பல மொழிகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.