செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை
இந்த சோதனையையடுத்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதிகாலை நேரத்தில் கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இருதய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.