இந்த விவகாரம் வர்ஷியின் தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனாலும் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வரதராஜன் மகளை பார்க்க வந்துள்ளார். அவர் இரவு சுமார் 8.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி போன பிறகுதான் இந்த கொலை நடந்திருக்கும். மேலும் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத அவர் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.