'டிசம்பர் 16'; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!

Published : Dec 14, 2024, 09:04 AM ISTUpdated : Dec 14, 2024, 09:07 AM IST

டிசம்பர் 16ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
14
'டிசம்பர் 16'; புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்த மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது!
Tamilnadu Rains

தமிழ்நாட்டில் டிசம்பர் 16ம்தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும் என்றும் இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ''மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதி​களில் நிலவிய காற்​றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்​தீவு மற்றும் மாலத்​தீவு பகுதி​களில் நிலவு​கிறது.

இது மேற்கு திசை​யில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்த​மான் கடல் பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்​கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை​யில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம். 

24
Heavy Rain in Tamilnadu

இதன் காரணமாக தமிழகம், புதுச்​சேரி​யில் இன்றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். வரும் 16, 17, 18-ம் தேதி​களில் பரவலாக​வும், 19-ம் தேதி சில இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, ராமநாத​புரம், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​யிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​யிலும் கன முதல் மிக கனமழை​யும், தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், விழுப்பு​ரம், அரியலூர், பெரம்​பலூர், கள்ளக்​குறிச்சி, புதுக்​கோட்டை, திருச்சி, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது.

வெளுத்துக்கட்டும் மழை; இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை? முழு விவரம்!

34
Chennai Rains

வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், விழுப்பு​ரம், அரியலூர், பெரம்​பலூர், கள்ளக்​குறிச்சி, செங்​கல்​பட்டு, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகுதி​களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்​ளது. கடந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி 29 இடங்​களில் அதிக​னமழை​யும், 81 இடங்​களில் மிக கனமழை​யும், 16 இடங்​களில் கனமழை​யும் பெய்​துள்ளது.

44
Tirunelveli Flood

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை 54 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது. இந்த காலகட்​டத்​தில் வழக்​கமாக 40 செ.மீ. மழை பெய்​யும். இந்த ஆண்டு வழக்​கத்​தைவிட 32 சதவீதம் அதிகமாக மழை பெய்​துள்ளது. டிச. 12-ம் தேதி வரை 16 சதவீதம் மட்டுமே மழை அதிகமாக இருந்​தது. ஒரே நாளில் 16 சதவீதம் கூடு​தலாக மழை கிடைத்​துள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரண பயத்தை காட்டும் வடகிழக்கு பருவமழை!

Read more Photos on
click me!

Recommended Stories