இதனால் பொதுமக்கள் எந்த நேரத்தில் ஏரி உடையுமோ என்ற மரண பீதியில் இருக்கும் அளவுக்கு மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., திண்டிவனத்தில் 37.40 செ.மீ, நேமூர் 35.20 செ.மீ, வல்லம் 32 செ.மீ., செம்மேடு 31 செ.மீ, வானூர் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 49 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.